மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கட்டும் என்று சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தான் முதலில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கருத்து சொன்ன ஓ.பன்னீர்செல்வம், அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கட்டும் என்று கூறினார்.