திருமலை: ஆந்திராவில் என்டிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் பெயர் இரவோடு இரவாக ராஜசேகர் ரெட்டி பல்கலைக் கழகமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் ‘டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகம்’ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பல்கலை கழகத்தின் பெயரை நேற்று முன்தினம் இரவோடு இரவாக, ‘டாக்டர் ஒய்எஸ்ஆர் ஆரோக்யா பல்கலைக் கழகம்,’ என்று முதல்வர் ஜெகன் மோகன் மாற்றம் செய்துள்ளார்.