சென்னை: கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ரயிலில் வீட்டிற்கு திரும்பிய நபரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டியுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவின் மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று துரைப்பாக்கம், எழில்நகர் பகுதியை சேர்ந்த ரவீஸ்வரன் (55) என்பவர் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். அப்போது ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் நின்றவுடன் 4 பேர் ரயிலில் ஏறி ரவீஸ்வரனின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.