மேற்படி வழக்கு விசாரணையானது நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (29.04.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நாமக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி முனுசாமி, பிஏ.,பில். மேற்படி குற்றவாளிகளுக்கு 40 வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ.4000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக செயல்பட்ட இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் கோமலவள்ளி மற்றும் காவலர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
The post நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.