இதை கேள்விப்பட்டு பாலாஜி உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.