கோலா உருண்டை குழம்பு

செய்முறை:

கொத்துக்கறியினை குக்கரில் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்து எடுத்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துருவல், வறுகடலை, கசகசா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்தூள், மல்லிதூள், சிறிதளவு தேங்காய் விழுது சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை நீங்கும் வரை வைத்திருந்து இறக்கவும். கொத்துக்கறியுடன் முட்டையும் உடைத்து ஊற்றி, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து பிசைந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். வாணலியில்  பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உருண்டைகளை பொரித்து எடுக்கவும். உருண்டைகள் ஆறியதும், குழம்பில் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

Related Stories: