திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேச்சு: கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது

கோவை: திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால்: கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்துள்ளனர். அண்மையில் பீளமேடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து த.பெ.க. வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பீளமேடு காவல்நிலையத்தில் விசாரணைக்கு பிறகு ராமசாமியை கைது செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டனர். உத்தம ராமசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  

திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த 5ம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்து மதத்தை சேர்ந்தவர்களை  அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து பாஜக தரப்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் ஆ.ராசாவுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் ஆ.ராசாவின் கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். திமுக.எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர்.கைது செய்ததை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: