பெங்களூரு: கர்நாடகாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாநகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்கள் தங்கி இருந்த பாழடைந்த கட்டிடத்தை போலீசார் நேற்று காலை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், டைரி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதாவர்கள் ஷிவமொக்காவை சேர்ந்த இன்ஜினியர் சையத் யாசின் (22), மங்களூரு மாவட்டத்தை சேர்ந்த மாஸ் முனீர் அகமது (22) என்று விசாரணையில் தெரிந்தது.