குடும்பத்துடன் கிடா வெட்டுக்கு சென்ற ஊராட்சி செயலர் வீட்டில் 35 பவுன் நகை, பணம் கொள்ளை

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கதிர்வேல்(49). இவர் வெள்ளைக்கவுண்டன் வலசு ஊராட்சி அலுவலகத்தில் செயலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வள்ளிநாயகம் (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 16ம் தேதி சொந்த ஊரான வெள்ளைக்கவுண்டன் வலசு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.

அப்போது வீட்டில் பின்புற கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 35 பவுன் நகை, இரண்டு வெள்ளி கொலுசு, ரொக்கப்பணம் 85 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து கதிர்வேல் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: