தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கதிர்வேல்(49). இவர் வெள்ளைக்கவுண்டன் வலசு ஊராட்சி அலுவலகத்தில் செயலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வள்ளிநாயகம் (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 16ம் தேதி சொந்த ஊரான வெள்ளைக்கவுண்டன் வலசு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.