வேளச்சேரி: சென்னை மாநகராட்சி, 178வது வார்டுக்குட்பட்ட தரமணி, பாரதி நகர், காவேரி தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் உள்ள 2 மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிப்பதால் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவ்வாறு மின் கம்பம் விழுந்தால், மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, வேளச்சேரி கிழக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும், மின்வாரிய அதிகாரிகள் இதுவரை மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.