திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய, மாநில அரசு மற்றும் தேசிய நலவாழ்வு மையம் வழிகாட்டுதல்படியும் பாஜக மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் நடைபெற்றது. முகாமுக்கு பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.டில்லிபாபு தலைமை வகித்தார். இளைஞரணி நிர்வாகிகள் அபிலாஷ், ஜீவா, திலக அரசன், கார்த்திக், தாமோதரன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், பாஜக மாவட்ட தலைவர் அஷ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.