திருவனந்தபுரம்: கேரளாவில் சமையல் அறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது கள்ளக்காதலி கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கஞ்சா, பிரவுன்சுகர், உள்பட போதைப்பொருள் விற்பனையும், பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த குடியிருப்பின் சமையலறையில் ஒரு மண் சட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது தெரிய வந்தது.