யூடியூப் வீடியோ பார்த்து சமையல் அறையில் கஞ்சா செடி வளர்ப்பு: கள்ளக்காதலியுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் சமையல் அறையில் கஞ்சா செடி  வளர்த்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது கள்ளக்காதலி கைது  செய்யப்பட்டனர். கேரளாவில் கஞ்சா, பிரவுன்சுகர், உள்பட  போதைப்பொருள் விற்பனையும், பயன்பாடும்  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொச்சியில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. அங்கு போலீசார்  சோதனை நடத்தினர். இதில் அந்த குடியிருப்பின் சமையலறையில் ஒரு மண்  சட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது தெரிய வந்தது.

செடிக்கு காற்று கிடைப்பதற்காக அதன்  அருகில் சிறிய மின்விசிறியும், வெளிச்சத்திற்காக எல்இடி பல்பும்  பொருத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக, அந்த  குடியிருப்பில் வசித்த பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி பகுதியை  சேர்ந்த ஆலன் (26) மற்றும் அவரது கள்ளக்காதலியான காயங்குளத்தை சேர்ந்த  அபர்ணா (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கஞ்சா செடியை வளர்ப்பது எப்படி?  என்பதை யூடியூப்பில் பார்த்து 2 பேரும் இந்த செடியை வளர்த்துள்ளனர். இவர்கள் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: