வின்ட்ஹோக்: சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 1947ம் ஆண்டில் கடைசி சிறுத்தை காணப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, 1952ம் ஆண்டு சிறுத்தை இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்து தற்போது 74 ஆண்டுகளாகும் நிலையில், நமீபியாவில் இருந்து கண்டங்களுக்கு இடையேயான இடமாற்ற திட்டத்தின் கீழ், 8 சிறுத்தைகள் போயிங் சிறப்பு விமானம் மூலம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானத்தின் முன்பகுதியில் அழகிய புலி ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த சிறுத்தைகள் சரக்கு விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டு, அதே நாளில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இவற்றில் 2 ஆண், ஒரு பெண் சிறுத்தையை பிரதமர் மோடி தனது பிறந்த நாளான்று பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளுக்குள் திறந்து விடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.