திருவனந்தபுரம்: சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7வது நாளாக பங்கேற்று நடந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் பயணத்தில் உள்ளார். இரவு ஓய்வு எடுத்துக்கொண்ட ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வெள்ளையானை சந்திப்பில் இருந்து 7வது நாளாக பயணத்தை தொடங்கினர். அங்கு மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல், நாட்டில் சாதி, மத வேறுபாடுகளை களைந்து அன்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை கொண்டுவர வேண்டும் என்பதே தனது யாத்திரையின் நோக்கம் என்று கூறினார்.