புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் கடந்த 2020ம் ஆண்டு இந்திய-சீன வீரர்கள் இடையே கடும் மோதல் நடந்தது. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வந்தன. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளின் 16வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் , கிழக்கு லடாக்கின் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெறுவது என இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. அதன் படி ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிட்ட வழிமுறைகளின் கீழ் படைகள் விலக்கும் நடைமுறைகள் கடந்த 8ம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கியது.