மும்பை: ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்.16 முதல் நவ.13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அவற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தங்கள் அணிகளை ஏற்கனவே அறிவித்து விட்டன.இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் தமிழக வீரர்கள் அஷ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.