சென்னை: அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்டி, பொதுச் செயலாளருக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், இடைப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: உச்சநீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி,பொதுச் செயலாளருக்கு உரிய தேர்தல் நடக்கும். பெங்களூரு புகழேந்தி ஏற்கனவே அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். கட்சிக்கு எதிரான விரோத செயல்களில் ஈடுபட்டதால்,அவரை நீக்கினோம். அவர் மக்கள் செல்வாக்கு இழந்த நபர். வார்டு உறுப்பினரை விட குறைவான வாக்கு வாங்கிய புகழேந்தியை, விவாத மேடையில் பேச வைக்கிறார்கள். தகுதியான நபர்களை அமர வைத்து பேச வைக்கவேண்டும். பெங்களூருவில் அதிமுக அழிவதற்கு அடித்தளம் வகித்தவர் புகழேந்தி.