ஹுப்பாளி: நியூசிலாந்து ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது. ஹூப்ளி, கர்நாடகா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது நாளான நேற்று டாஸ் வென்ற நியூசி. ஏ அணி முதலில் பந்துவீசியது. கேப்டன் பிரியங்க் பாஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன் இருவரும் இந்தியா ஏ இன்னிங்சை தொடங்கினர். ஈஸ்வரன் 22 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ருதுராஜ் கெயிக்வாட் 5 ரன், ரஜத் பத்திதார் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.