திருமலை: காற்று மாசு தடுக்க திருமலை-திருப்பதி இடையே எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்தை பிரம்மோற்சவம் முதல் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் காற்று மாசு தடுக்க எலக்ட்ரிக் பஸ்களை அதிக அளவில் இயக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதற்கட்டமாக திருமலை-திருப்பதி இடையே அவற்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பஸ்களை ஒலெக்டா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 9 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம், 12 அடி உயரம் கொண்ட இந்த பஸ்சில் 36 இருக்கை வசதி, ஏர் கண்டிஷன், சிசிடிவி கேமராக்கள், தானியங்கி கதவு அமைப்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. ஒரு பேட்டரி சார்ஜில் சுமார் 300 கிலோமீட்டர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.