திருமலை: அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் 12 மணி நேரம் மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம் என்பதால் ஏழுமலையான் கோயில் கதவுகள் இந்த 2 நாட்களும் 12 மணிநேரம் மூடப்பட உள்ளது. அக்டோபர் 25ம் தேதி மாலை 5:11 மணி முதல் 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனால், அன்று கோயில் கதவுகள் காலை 8:11 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7:30 மணிக்கு சுத்தம் செய்து ஆகம விதிகளின்படி தோஷ நிவாரண பூஜைகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும்.