ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் அருகே தொழிற்சாலையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள காப்பர் பொருட்களை திருடிய தொழிற்சாலை செக்யூரிட்டி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைபாக்கம் சிப்காட் பகுதியில் அலுமினியம் உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.