காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் மறுசீரமைப்பு விவரங்களை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் மறுசீரமைப்பு விவரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் 29.8.2022 அன்று செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் பாகம் எண்.264 மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் பாகம் எண்.129ம் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டது.