மும்பை: டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (54). இவர் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் இருந்து மும்பை நோக்கி பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். மாலை 3.15 மணியளவில், பால்கர் மாவட்டத்தில் உள்ள சூர்யா நதி பாலத்தின் மீது வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை டிவைடர் மீது மோதியது. இதில், சைரஸ் மிஸ்திரியும், மற்றொருவரும் அதே இடத்தில் இறந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை அதிவேகமாக ஓட்டியதும், மிஸ்திரி சீட்பெல்ட் அணியாததும்தான் இறப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.