நெல்லை: பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை, மதுரை வழியாக செல்லும் குருவாயூர், அந்தியோதயா மற்றும் கோவை இரவு நேர ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலில் (16127) நேற்று முதல் வரும் 11ம் தேதி வரையும் குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயிலில் (16128) வரும் 12ம் ேததி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் (20691) நேற்று முதல் வரும் 12ம் தேதி வரையும், நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலில் (20692) வரும் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.