பெரம்பூர்: சென்னை திரு.வி.க நகர் காமராஜ நகர் 2வது தெருவை சேர்ந்தவர் இக்கிரமுல்லா (35). கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கடந்த 8 வருடங்களாக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன், இந்த பிரியாணி கடைக்கு வந்த ஜி.கே.எம். காலனி 37வது தெருவை சேர்ந்த சஞ்சய் (20), கொளத்தூர் 10வது தெருவை சேர்ந்த ஜீவா (19) ஆகியோர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்தனர். கடைக்காரர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் கடையில் இருந்தவர்களை தாக்கிவிட்டு சென்றனர். இதுகுறித்து கடைக்காரர் அளித்த புகாரின்பேரில், ராஜமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சய், ஜீவா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேவந்த இருவரும், தங்களது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அதே பிரியாணி கடைக்கு சென்றுள்ளனர்.