சிறுமியின் கை, கால்களை கட்டி பாலியல் தொந்தரவு: போக்சோவில் முதியவர் கைது

திருப்பத்தூர்: வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்(63), பீடி சுற்றும் தொழிலாளி. இவர் ஜோலார்பேட்டை அருகே வசிக்கும் மகள் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் சென்றபோது, வெளியில் நின்றிருந்த 10 வயது சிறுமியிடம் நைசாக பேசி விளையாடியுள்ளார்.

ஆட்கள் நடமாட்டம் குறைந்ததும் சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமியின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மகள் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் தாய் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது மறைவான இடத்தில் மகள் அழும் குரல் கேட்டு சென்றபோது தங்கவேல், சிறுமியிடம் அத்துமீறி நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தங்கவேலை கைது செய்தனர்.

The post சிறுமியின் கை, கால்களை கட்டி பாலியல் தொந்தரவு: போக்சோவில் முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: