புதுடெல்லி: கைலாசாவில் உள்ள நித்தியானந்தா உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதால், அவரை காப்பாற்ற இலங்கை தஞ்சமடைய அனுமதி கேட்டு அந்நாட்டு அதிபருக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார் சாமியார் நித்தியானந்தா. அவ்வப்போது, இணையத்தில் தோன்றி பக்தர்களுக்குக் காட்சியளித்து உரையாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் அவருடைய உடல்நிலை மோசமடைந்து விட்டதாகவும், அவர் சமாதி நிலையை அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அடுத்த சில நாட்களில் அவர் இறந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இதை நித்தியானந்தா தரப்பினர் மறுத்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இணையத்தில் தோன்றிய நித்தியானந்தா, ‘நான் குணமடைந்து விட்டேன். தற்போது மறுபிறவி எடுத்து உள்ளேன்,’என்று கூறினார். இந்நிலையில், கைலாசா தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என கூறிக்கொள்ளும் ஆனந்த சுவாமி என்பவர், கடந்த மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஸ்ரீ நித்தியானந்தா பரமசிவம் சுவாமிகளின் உடல்நிலை மிகவும் மோசமான இருக்கிறது.