இந்நிலையில், 4வது நாளாக நேற்று முழு கடை அடைப்பு, போக்குவரத்து நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. பல முக்கிய சாலைகளை போராட்டக்காரர்கள் மூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டினார். ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமரான சவுத்ரி அன்வருல் ஹக்குடன் ஷெரீப் பேசியதாகவும், பிராத்தியத்தில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியினருடன் பேசி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வன்முறையை தொடர்ந்து பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
The post 4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.