திருவனந்தபுரம்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது மாங்குளம் கிராமம். இந்த கிராமத்திற்குள் சில தினங்களுக்கு முன் புகுந்த ஒரு சிறுத்தை, கோழிகள் மற்றும் ஆடுகளை அடித்துக் கொன்றது. இதனால், சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் வலை, கூண்டுகளை வைத்தனர். இந்த வலையில் இரு தினங்களுக்கு முன் ஒரு சிறுத்தை சிக்கி, தப்பி விட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கோபாலன் என்ற தொழிலாளி தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார்.