தர்மம்..நியாயம் வென்றது!: ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியுள்ளது..மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரலாற்று சிறப்பு மிக தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததையடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ்க்கு அதிமுகவினர் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார். தர்மம் வென்றுள்ளது, நியாயம் வென்றுள்ளதாக தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர், ஒற்றை தலைமை என்ற அங்கீகாரத்தை நீதிபதிகள் வழங்கியுள்ளனர் என தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்கள் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக அதிமுக ஒருபோதும் செயல்பாடாது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும். அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோவாக தான் அமையும் எனவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். 

Related Stories: