லண்டன்: இங்கிலாந்துக்காகவும், கன்சர்வேட்டிவ் கட்சிக்காகவும் இரவு பகலாக உழைப்பேன் என்று பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர் பதவி வகிக்க முடியும். அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த செவ்வாய்கிழமை இவர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்தது.