விழுப்புரம்: தொடர்மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் திருக்கோவிலூர்- அரகண்டநல்லூர் கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை இணைக்கும் தரைப்பாலம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திருக்கோவிலூர் வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.