நடிகை சோனாலி கொலையில் ஓட்டல் உரிமையாளர் உடந்தை

பனாஜி: அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகை சோனாலி போகத், கடந்த 23ம் தேதி கோவாவில் மாரடைப்பால் இறந்தார். சொத்துக்காகவும், சோனாலியின் அரசியல் வாழ்க்கையை அழிக்கவும் அவரது உதவியாளர்கள்தான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருப்பதாக சோனாலியின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். சோனாலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய கோவா போலீசார் சோனாலியின் உதவியாளர்கள் சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசியை கைது செய்தனர்.

இவர்கள் மதுவில் ஆபத்தான ரசாயன போதைப் பொருள் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்த பிறகு தான் மாரடைப்பால் சோனாலி இறந்ததும் விசாரணையில் தெரிந்தது. இந்நிலையில், இவர்களுக்கு போதைப் பொருளை விற்ற டீலர் தத்தாபிரசாத் கனோகர், மது விருந்து நடந்த குருலிஸ் ஓட்டலின் உரிமையாளர் எட்வின் நுனிசையும் கோவா போலீசார் நேற்று கைது செய்தனர். கொலை வழக்குடன் போதைப் பொருள் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதில், இந்த 2 பேரும் கைதாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: