பனாஜி: அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகை சோனாலி போகத், கடந்த 23ம் தேதி கோவாவில் மாரடைப்பால் இறந்தார். சொத்துக்காகவும், சோனாலியின் அரசியல் வாழ்க்கையை அழிக்கவும் அவரது உதவியாளர்கள்தான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருப்பதாக சோனாலியின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். சோனாலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய கோவா போலீசார் சோனாலியின் உதவியாளர்கள் சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசியை கைது செய்தனர்.