திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, 2வது நாளாக தெலுங்கு தேசம் கட்சி பேனரை ஒய்எஸ்ஆர் காங்கிரசார் கிழித்ததை கண்டித்து, சந்திரபாபு நாயுடு தர்ணாவில் ஈடுபட்டார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டம், குப்பத்தில் நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கட்சி கொடி, பேனர் வைப்பதில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சந்திரபாபு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், அதை தடுக்கும் வகையில் ஒய்எஸ்ஆர் கட்சியினர் பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர்.