திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்து, ஜாதி ரீதியாக திட்டியதாக பாஜகவை சேர்ந்த பரசுராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த தொழுப்பேடு ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடந்தது. குழம்பாடியில் நடந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் துரை பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த பரசுராமன், ஊராட்சி மன்ற தலைவர் துரையை ஜாதி ரீதியாக இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.