தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி ஊராட்சி ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி(47). இவரது மனைவி ராணி(43). இவர்களுக்கு ராஜபாண்டி(24), சிவா(22) என்ற 2 மகன்கள், பரணி(21) என்ற மகள் உள்ளனர். ராணி வெளிநாட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் பழனியின் தாய் உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் இறுதி சடங்கிற்கு சொந்த ஊருக்கு வந்த ராணி இங்கேயே தங்கிவிட்டார்.இவர்களது மகள் பரணி, புதூரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்துள்ளார். கடந்த 22ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் திருமணம் தாய் ராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் அதில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.