மாலத்தீவு: மாலத்தீவு தலைநகர் மாலேவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலை ஒன்றில் அந்த நாட்டு அமைச்சர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அலி சோலே வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரை வழிமறித்த ஒருவர் கத்தியால் தாக்க முற்பட்டார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அமைச்சர் தன்னுடைய கைகளை கற்றுக்கொண்டு தாக்குதலை தடுக்க முயன்றார். இருந்தபோதும் அவருடைய கழுத்து மற்றும் முகத்தில் குத்தி, அவருக்கு கத்திகுத்து ஏற்பட்டது.