காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், அரும்புலியூரில் இருந்து கரும்பாக்கம் வரும் ஏரி பாசனகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: உத்திரமேரூர் வட்டம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாக்கம் கிராமம். இக்கிராம விவசாய நிலங்களுக்கு அரும்புலியூர் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக ஏரிப்பாசன நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அரும்புலியூரை சேர்ந்த சில விவசாயிகள் தங்களுக்கு வசதியாக கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.