முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.!

சென்னை: ஆகஸ்ட் 30-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழிற்கொள்கை, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. பருவ மழை தொடங்கும் முன்னரே, கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாத வண்ணம் பருவ மழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார் என தெரிகிறது.

Related Stories: