வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் அருகே சவேரியார் நகர், நடேசன் நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பள்ளமாக காணப்படுகிறது. கால்வாய் வசதிகள் இல்லாததால் தற்போது பெய்த மழையினால் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.