திருவள்ளூர்: திருத்தணியில் உள்ள ஜிஆர்டி இன்ஸ்டியூட் ஆப் பார்மசியூட்டிகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் சார்பில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி நிர்வாக அலுவலர் சசிகுமார், முதல்வர் ஆர்.மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தனர். பேரணியை திருவள்ளூர் டிஎஸ்பி கோ.சந்திரதாசன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி பேசுகையில், ‘மாவட்ட முழுவதும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.