மாடியில் இருந்து குதித்தும், விஷம் குடித்தும் பள்ளியில் மாணவி, மாணவன் அடுத்தடுத்து தற்கொலை முயற்சி: திருப்புவனத்தில் பரபரப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனத்தை சேர்ந்த 15 வயது மாணவி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவி கழிவறையில் ரத்தத்தால் ‘ஸாரி அம்மா’ என எழுதியதுடன், பேனாவால் உடலை கீறிக் கொண்டார். பின்னர், பள்ளியின் 2வது மாடியில்  இருந்து கீழே குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர், பள்ளி வகுப்பறையில் விஷ மருந்தை குடித்து மயங்கினார். அவரை மீட்ட ஆசிரியர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒரே சமயத்தில் மாணவியும், மாணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்புவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: