விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் மேலும் 69 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த சம்வபத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த கலவர வழக்கு தொடர்பாக போலீசார் 322 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.