நாகை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 மீனவர்களையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் முல்லைத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி நாகை மீனவர்களின் படகை சிறைபிடித்தனர். அதனை தொடர்ந்து இலங்கை திரிகோணமலை முகாமுக்கு அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர்.