ஈரோடு : ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் சுதா மருத்துவமனைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.இதனைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டதையடுத்து சீலினை அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கம் போல் மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் நேற்று மீண்டும் சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.