கருமுட்டை விற்பனை விவகாரம் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் சீல்: டாக்டர்கள், ஊழியர்கள் தர்ணா

ஈரோடு : ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் சுதா மருத்துவமனைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.இதனைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர்  சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டதையடுத்து சீலினை அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட் உத்தரவிட்டது.  இதையடுத்து, வழக்கம் போல் மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் நேற்று மீண்டும் சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

இதனால், மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், மற்றும் ஊழியர்கள்  தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோர்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: