திருத்தணி: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. திருத்தணி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கோமதி தலைமை வகித்தார். இதில், திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ் பேசுகையில், ‘இத்திட்டம் செயல்படுத்துவதற்கு அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு அவசியம். இத்திட்டம் மூலம் 6 ஊராட்சிகளில், விவசாயிகளுக்கு தென்னங்கன்று முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. பச்சை பயிறு, உளுந்து, துவரை மற்றும் காராமணி போன்ற சிறுதானிய பயிர்களுக்கு மொத்தம், 37 ஏக்கர் பரப்பிற்கு மானியம் வழங்கப்படுகிறது.