சென்னை : வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவசியமின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.