மாநிலங்களவை தேர்தலில் ஓட்டு போட ரூ.25 கோடி: ராஜஸ்தான் அமைச்சர் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ராணுவ வீரர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர குதா. பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்த பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று பேசிய குதா, ``மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட என்னிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டது. அதே போல, 2020ம் ஆண்டில் முதல்வர் கெலாட்டுக்கு எதிராக செயல்பட ரூ.60 கோடி பேரம் பேசப்பட்டது. இது குறித்து எனது குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். அவர்கள் நமக்கு காசு, பணம் வேண்டாம். நல்ல பெயர் எடுப்பதே முக்கியம் என்று கூறினார்கள். இவ்வாறாக அனைவரும் நடந்து கொண்டால், எல்லாம் நல்லபடியாக நடக்கும்,’’ என்று கூறினார்.

Related Stories: