இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென கிரிப்டோ மோசடி கும்பலால் முடக்கப்பட்டது. அவரது கணக்கை முடக்கிய கும்பல், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்குக்கு, மூன்று பிட்காயின்களை நன்கொடையாக வழங்கியதற்காக முடக்கியதாக கூறியுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரான இம்ரான்கானின் சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 7.4 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.