பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் கூலி ஆட்கள்வைத்து மூட்டைகளில் மணல் கடத்தப்படுவதாக திருத்தணி புதிய டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள விக்னேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று முன் தினம் இரவு பள்ளிப்பட்டு பஜார் வீதி அருகே கொசஸ்தலை ஆற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது ஆற்றில் மூட்டைகளில் மணல் நிரப்பிக் கொண்டிருந்த பெண்கள் ஓட்டம் பிடித்தனர். அப் பகுதியில் பதுக்கிவைத்த 60 மூட்டைகள் மணல் பறிமுதல் செய்து வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.